லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொளுது லக்னோ அணி களமிறக்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த ப்ரித்வி ஷா, 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 61 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து டேவிட் வார்னர், 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரோமன் போவெல், 3 ரன்கள் அடித்து வெளியேற, அவரைதொடர்ந்து ரிஷப் பந்த் – சர்பராஸ் கான் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. இதில் ரிஷப் பந்த் 39 ரன்கள் அடித்தும், சர்பராஸ் கான் 36 ரன்கள் அடித்தனர். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…