ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 19-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 16 போட்டிகளிலும், டெல்லி அணி 13 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணி, 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல டெல்லி அணி, 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எதிர்பார்க்கப்படும் XI:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்ரவர்த்தி ஆகிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
டெல்லி கேபிட்டல்ஸ்:
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ப்ராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், அன்ரிச் நோர்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…