ஐபிஎல் தொடரில் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. தற்பொழுது நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் முதல் இடத்திற்கு வரும்.
ஆனால் 6 ஆம் இடத்தில் உள்ள சென்னை அணி, அடுத்து நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு முன் நடந்த போட்டியில் சாம் கரணை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேலும், இன்றைய போட்டியில் டு ப்ளஸ்ஸிஸ்க்கு ஓய்வளித்து அவருக்கு பதில் இம்ரான் தாஹிரை களமிறக்க வாய்ப்புள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…