ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஷிகர் தவான் களமிறங்கினர். முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.
157 ரன்கள் அடித்தால் கோப்பை நிச்சியம் என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – டி காக் களமிறங்கினார்கள். தோட்டாக்கள் முதலே இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதன்பின் 20 ரன்கள் அடித்து டி காக் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் சிறப்பாக ஆட, அணியில் ஸ்கொர் உயர்ந்தது. அதன்பின் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசிய நிலையில், 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் இருக்கும் இஷான் கிஷன் இறுதிவரை காலத்தில் இருக்க, பின்னர் களமிறங்கிய பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக மும்பை, 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து, வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதான் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையையும் படைத்தது. அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய இறுதி போட்டிகள் அனைத்திலும் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியுள்ளது. அதிலும், 2018 ஆம் ஆண்டில் நடந்த இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான புனே அணியுடன் மோதியது. ஆனால் இம்முறை நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…