IPL2020 finals: 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published by
Surya

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல, இரண்டாம் குவாலிபையரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைதொடர்ந்து தற்பொழுது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஷிகர் தவான் களமிறங்கினர். முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.

157 ரன்கள் அடித்தால் கோப்பை நிச்சியம் என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – டி காக் களமிறங்கினார்கள். தோட்டாக்கள் முதலே இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதன்பின் 20 ரன்கள் அடித்து டி காக் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் சிறப்பாக ஆட, அணியில் ஸ்கொர் உயர்ந்தது. அதன்பின் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசிய நிலையில், 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் இருக்கும் இஷான் கிஷன் இறுதிவரை காலத்தில் இருக்க, பின்னர் களமிறங்கிய பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக மும்பை, 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து, வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதான் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையையும் படைத்தது. அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை விளையாடிய இறுதி போட்டிகள் அனைத்திலும் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியுள்ளது. அதிலும், 2018 ஆம் ஆண்டில் நடந்த இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான புனே அணியுடன் மோதியது. ஆனால் இம்முறை நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

7 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

8 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

9 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

9 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

10 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

11 hours ago