#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் 2021-ன் 14 சீசனின் இன்றைய 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

மும்பை மற்றும் சென்னை போட்டியில் முழு உடல் தகுதி இல்லாமல், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அப்போட்டியில் போலார்டு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இன்று நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் மீண்டும் களமிறங்கினார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 6 ஓவரில் 56 ரன்களை சேர்ந்தனர். இதன்பின் 30 பந்துகளில் 33 அடித்த ரோஹித் சர்மா, சுனில் நரனே பந்தில் விக்கெட்டை இழந்தார்.

இவரைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் களமிறங்கினார். ஒருபக்கம் மும்பை அணி விக்கெட் சரிய, மறுபக்கம் டி காக் நிதானமாக விளையாடி அவரது அரை சத்தத்தை அடித்து, 55 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்சி கொடுத்து அவுட்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள  இஷான் கிஷன் மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களில் வெளியேறினார். க்ருனால் மற்றும் போலார்டு பாட்னர்ஷிப் சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. போலார்டு போட்டியின் இறுதி ஓவரில் 21 ரன்களில் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாக, க்ருனால் பாண்டியா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்கம் சிறப்பாக அமைந்த நிலையில், அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து, ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால், 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற முனைப்புடன் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. கொல்கத்தா அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா, லோக்கி பெர்குசன் தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

1 hour ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago