சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் தொடக்க ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே ருதுராஜ் 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயீன் அலி, டு பிளெசிஸிடன் கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவர்கள் இருவரும் கூட்டணியில் 108 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய வந்த மொயின் அலி 36 பந்தில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 58 ரன்கள் குவித்தார். இதையடுத்து, நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரை சதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார். இதையெடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் அம்பதி ராயுடு 72*, ரவீந்திர ஜடேஜா 22* ரன்களுடன் நின்றனர்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…