ஹைதராபாத் போட்டியில் களமிறங்கும் முகேஷ் சவுத்ரி ..? வங்கதேசம் திரும்பும் முஸ்தபிசுர் !

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சிக்காக வங்கதேசம் திரும்ப உள்ளார்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் இருக்கிறார். இவர் சென்னை அணிக்காக விளையாடிய 3 போட்டிகளும் விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உ ள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் எடுத்த இவர் இந்த தொடரின் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும், பர்புள் கேப்பையும் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது, இவரை வங்கதேச அணி இந்த ஆண்டில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சியில் ஈடுபட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இவர் வருகிற ஏப்ரல்-5 ல் ஐபிஎல் தொடரில் நடைபெற இருக்கும் சென்னை, ஹைதராபாத் போட்டியில் இவர் பங்கு பெற மாட்டார் என தெரிகிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை அணி நிர்வாகம் ரூ.2 கோடி கொடுத்து எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதனால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தாலும் ஒரு புறம் சிறிய மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள். அதற்கு காரணம், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இடது கை வேக பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி தான். முகேஷ் சவுத்ரி, இதற்கு முன் சென்னை அணிக்காக 2022 ம் ஆண்டு விளையாடினார். கடந்த 2023-ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் முகேஷ் விளையாடுவர் என்று எதிர்பார்த்த போது அவர் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறினார்.

முகேஷ் சவுத்ரி சென்னை அணிக்காக மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரை சென்னை அணி நிர்வாகம் 2022-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அறிமுகத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கு எடுத்தனர், பின் 2024ம் மீண்டும் இவரை சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago