Hardik Pandya spoke about the win [image source: ipl/jio cinema]
ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டியளித்தார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது மிகவும் கடினமான உழைப்பு.
இந்த சீசனுக்காக எங்கள் அணியின் விளையாடும் 12 வீரர்களை சில வியூகங்களின் அடிப்படையில் அமைத்து வந்தோம். மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி சூழல் இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. அதை டிரஸ்ஸிங் ரூமில் பார்க்க முடிகிறது. சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது அவசியம். அந்த வகையில் இதுவே எங்களது அணியாக இருக்கும் என நம்புகிறேன்.
தோல்வியில் இருந்து மீண்டெழ எங்களுக்கு ஒரே ஒரு வெற்றி தேவை என்று அனைவரும் நம்பினோம். இன்று ஒரு அற்புதமான தொடக்கமாக இருந்தது. முதல் 6 ஓவர்களில் 70 ரன்களை எடுப்பது எப்போதும் அற்புதமானது. வாய்ப்பு வரும் போது எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ரன் எடுத்ததை பார்க்க நன்றாக இருந்தது.
ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினர். அவர் தான் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார். டெல்லிக்கும் எங்களுக்கும் இடையிலான ரன் வித்தியாசம் ஷெப்பர்ட் குவித்த அந்த ரன்கள் தான். நான் சரியான நேரத்தில் பந்து வீசுவேன். இன்றைய போட்டியில் அதற்கு தேவை ஏற்படவில்லை என தெரிவித்தார்.
லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…
அகமதாபாத் : விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12 அன்று,…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…
டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…