பொல்லார்ட் காட்டடி.., சென்னையை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி…!

Published by
murugan

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.  சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 72*, டு பிளெசிஸ் 50 , மொயின் அலி 58 ரன்கள் எடுத்தனர். 219 ரன்கள் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக  குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி கோக் 38 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த பொல்லார்ட், க்ருனால் பாண்டியா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் கூட்டணியில் 90 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடி வந்த பொல்லார்ட் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். கடைசிவரை களத்தில் பொல்லார்ட் 87* ரன்களுடன் நின்றனர். சென்னை, மும்பை தலா 7 போட்டிகளில் விளையாடி சென்னையில் 5 வெற்றிகளையும், 2 தோல்வி தழுவியுள்ளது . மும்பை 4 வெற்றிகளையும், 3 தோல்வியை தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

33 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago