#AUSvNZ: கேன் வில்லியம்சன் டக் அவுட்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அதிரடி வெற்றி!

Published by
Surya

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி மற்றும் இறுதி டி-20 போட்டியில் நியூஸிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

இதனால் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப்பெ – ஆரோன் பின்ச் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பிலிப்பெ வெளியேற, மத்தியூ வேடு களமிறங்கினார். ஐவரும், மறுமுனையில் இருந்த பின்ச் நிதானமாக ஆடிவந்தனர்.

36 ரன்கள் அடித்து பின்ச் வெளியேற, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல், 1 ரன் மட்டுமே அடித்தார். அவரைதொடர்ந்து 44 ரன்கள் அடித்து வேடு வெளியேற, பின்னர் 26 ரன்கள் அடித்து ஸ்டோயினிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது.

143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே – மார்ட்டின் கப்தில் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிவந்தனர். 36 ரன்கள் அடித்து கான்வே வெளியேற, பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் டக் அவுட் ஆக, மறுமுனையில் இருந்த மார்ட்டின், அரைசதம் விளசி 71 ரன்கள் அடித்து வெளியேற, நியூஸிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. இதன்மூலம் டி-20 தொடரை நியூஸிலாந்து அணி, 3 – 2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

Published by
Surya

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

7 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

7 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

10 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

10 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

11 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

11 hours ago