NZvPAK : நியூசிலாந்தின் அதிரடி… பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் வெற்றி இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரி இன்றைய 35ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகிறது. அரையிறுதி ரேஸில் நீடிக்க வேண்டும் என்றால், இந்த போட்டியில் வெற்றி மிக அவசியம். இதனால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.

அந்தவகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 35 ரன்களுக்கு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே விக்கெட்டை இழந்தாலும், ரச்சின் ரவீந்திரன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானம் மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

சிறப்பாக விளையாடி வந்த இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து, தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இதன்பின், இருவரும் சதங்களை நோக்கி விளையாடி வந்த நிலையில், இதில் ரச்சின் ரவீந்திரன் தனது சதத்தை அடித்து 94 பந்துகளில் 108 ரன்கள் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் அடித்து இருந்த நிலையில், சதத்தை தவறவிட்டார்.

இதனைத்தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 29, மார்க் சாப்மேன் 39, க்ளென் பிலிப்ஸ் 41, மிட்செல் சான்ட்னர் 26 ரன்கள் அடித்து அணிக்கு ரன்களை குவித்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது நியூசிலாந்து. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 402 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago