ஒரு நாள் கிரிக்கெட்; இந்திய அணி அபார வெற்றி..!

Published by
murugan

இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 251 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர்.

28 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறியதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, மத்தியில் சிறப்பாக விளையாடி வந்த தவான் சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அதனைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, கே.எல்.ராகுலுடன், க்ருணால் பாண்டியா இணைந்து அதிரடியாக விளையாடினர்.  இருவரும் அரைசதம் விளாசினர்.  க்ருணால் பாண்டியா 58*, கே.எல்.ராகுல் 62*  ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 317 ரன்கள் எடுத்தது.

இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோனி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நிதானமாக விளையாடி வந்த ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து வெளியேற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக விளையாடி வந்த ஜோனி பேர்ஸ்டோவ் சதம் அடிக்காமல் 94 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இறங்கிய மொயீன் அலி 30, மோர்கன் 22 ரன்களுடன் வெளியேற இதைத்தொடர்ந்து, களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago