இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , பங்களாதேஷ் அணியும் மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வந்தது. இந்நிலையில் 32 ஓவரில் பாபர் ஆசாம் 96 ரன்களுடன் வெளியேறினர்.அதில் 11 பவுண்டரி விளாசினார். நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக் சதம் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் 27 , ஹரிஸ் சோஹைல் 6 , இமாத் வாசிம் 43 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தனர்.
ஆட்டம் தொடக்கத்திலே தடுமாறிய தமீம் இக்பால் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர்.பின்னர் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினர்.ஷாகிப் அல் ஹசன் , சௌமிய சர்க்கார் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதன் மூலம் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய சௌமிய சர்க்கார் 22 ரன்னில் அவுட் ஆனார் .
இறுதியாக பங்களாதேஷ் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 6 விக்கெட்டை பறித்தார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…