பங்களாதேஷ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் !

Published by
murugan

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும்  , பங்களாதேஷ் அணியும்  மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பாபர் ஆசாம் களமிறங்க இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணியில் இணைந்தனர். இருவருமே தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த இருவருமே அரைசத்தை நிறைவு செய்தனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வந்தது. இந்நிலையில் 32 ஓவரில் பாபர் ஆசாம் 96 ரன்களுடன் வெளியேறினர்.அதில் 11 பவுண்டரி விளாசினார். நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக்  சதம் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் 27 , ஹரிஸ் சோஹைல் 6  , இமாத் வாசிம் 43 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315  ரன்கள் அடித்தனர்.

பங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டையும்  , முகமது சைபுதீன் தலா 3 விக்கெட்டையும்  பறித்தனர்.இந்நிலையில் 316 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் , சௌமிய சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலே தடுமாறிய தமீம் இக்பால் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர்.பின்னர் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினர்.ஷாகிப் அல் ஹசன் , சௌமிய சர்க்கார்  இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதன் மூலம் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய சௌமிய சர்க்கார் 22 ரன்னில் அவுட் ஆனார் .

பின்னர் நிதானமாக விளையாடி ஷாகிப் அல் ஹசன் அரைசதம் நிறைவு செய்தார்.அரைசதம் அடித்த சிறிது நேரத்திலே ஷாகிப் அல் ஹசன் 64 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு மத்தியில் களமிறங்கிய லிட்டன் தாஸ் 32 , மஹ்மதுல்லா 29 ரன்களுடன் வெளியேறினர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 6 விக்கெட்டை பறித்தார்.

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago