19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 14-வது போட்டியாக இன்று நேபாள அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி சற்று தடுமாறி ரன்களை சேர்த்ததுடன் விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. 50 ஓவர் வரை பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்கு பிடித்து நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தனர்.
ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி ..!
அந்த அணியில் அதிக பட்சமாக பிபின் ராவல் 39 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியின் அராபத் மின்ஹாஸ் 3 விக்கெட்டை கைப்பற்றினார். அதன்பின் 198 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது.
இருந்தும் அவ்வப்போது விக்கெட்டை விட்டு கொடுத்தாலும் களத்தில் நின்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி 47.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் அணி வீரரான அசான் அவாய்ஸ் 63* ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…