இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வருகின்ற 22-ம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது.கேப்டன் கோலிக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.இதனால் கேப்டன் பெறுப்பை ரஹானே ஏற்று உள்ளார்.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் ,
லோகேஷ் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 , லோகேஷ் ராகுல் 36 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன்னில் வெளியேறினர்.இதை தொடர்ந்து நிலைத்து நின்ற ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய ரோஹித் 68 ரன்கள் குவித்தார்.
நிதானமாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார்.பின்னர் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினர்.நேற்றைய ஆட்டமுடிவில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் குவித்தனர். களத்தில் விஹரி , ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…