ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Published by
அகில் R

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகியது.

டாஸ் இடும் பொழுது பேசிய ருதுராஜ் பேட்டிங் அணியில் மாற்றம் செய்துள்ளதாக கூறினார். அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா இடம்பெற வில்லை எனவும் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் அணியில் இடம்பெறாமல் இருந்த டேரில் மிட்செல் விளையாடுவார் என கூறினார்.

இது குறித்து பேசிய அவர், “வித்தியாசமாக எதுவும் தோணவில்லை, வழக்கம் போல டாஸ்ஸை இங்கே தோற்றுள்ளேன். இந்த மைத்தனத்தில் சற்று நேரம் கழித்து ஈரத்தன்மை ஏற்படலாம் ஆனால் விளையாடும் போது தான் நமக்கு தெரியும் இந்த பிட்ச் எப்படி நம்மை ஆச்சர்யபடுத்த போகிறது என்று. அதனால் நாங்கள் ரன்களை நோக்கி முன்னேற உள்ளோம், கிடைக்கின்ற பந்தை அடித்து விளையாட தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் அமையும் என நம்புகிறேன். மேலும், ரவீந்திரா தனது ஃபார்மில் இல்லாததால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுத்துள்ளோம். அதனால் அவருக்கு பதிலாக அணியில் டேரில் மிட்செல் இடம் பெற்றுள்ளார்”, என்று போட்டிக்கு முன் டாஸ்ஸின் போது ருதுராஜ் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

3 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago