ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் மடியோ பெரடினியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் அரையிறுதியில் ரஃபேல் நடால் இத்தாலியின் பெரட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
பெரிட்டினிக்கு எதிரான அரையிறுதியில் நான்கு செட்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.இரண்டாவது அரையிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை எதிர்கொள்கிறார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால் தற்போது 21-வது பட்டத்தை வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஃபேல் நடால் வரலாறு சாதனை படைக்க இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளது. ரஃபேல் நடால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது நடால், நோவக் ஜோகோவிச் மற்றும் மூத்த வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…