இங்கிலாந்து அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணியில் ராபின்சன் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடி வந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 11.1 ஓவரில் 25 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோரி பர்ன்ஸ் 11, டொமினிக் சிப்லி 9 ரன்களுடன் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டம் பாதியில் மழை குறுக்கிட்டதால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…