ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் – ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தனர். 134 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜோஸ் பட்லர் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் சஞ்சு சாம்சன் இறங்கினார்.
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி விளாசி 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சிவம் துபே 22, டேவிட் மில்லர் 5 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசி வரை களத்தில் சஞ்சு சாம்சன் 42*, மில்லர் 24* ரன்களுடன் நின்றனர்.
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. கொல்கத்தா இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…