பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய 50-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் மோதியது.அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் இறங்கினார்கள்.இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ராபின் உத்தப்பா 30 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், இறங்கிய கேப்டன் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களில் ரன் அவுட்டாகினார்.கடைசிவரை களத்தில் ஸ்மித் 31* , பட்லர் 22* ரன்களுடன் இருந்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…