ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஷீத் கான்!

Published by
பாலா கலியமூர்த்தி

டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரஷித் கான் அணியில் இரண்டு மாற்று வீரர்கள் உள்ளிட்ட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே, ரஷித் கான் ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேப்டன் என்ற முறையில் தேர்வுக்குழுவினர், தன்னிடம் ஆலோசிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கேப்டனாகவும், பொறுப்பான நபராகவும் இருக்கும் போது அணியின் தேர்வின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு உரிமை உண்டு எனவும் கூறினார்.

தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்காக எப்போதும் விளையாடுவது எனது பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரஷித் கான் கேப்டன் பதிவில் இருந்து விலகிய நிலையில், முகமது நபி உலகக் கோப்பைக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 அணி: ரஷீத் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய், உஸ்மான் கானி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, முகமது ஷாசாத், முஜீப் உர் ரஹ்மான், கரீம் ஜனத், குல்பதீன் நாயப், நவீன் உல் ஹக், ஹமீத் அஸ்ஃபான் தவ்லத் ஜத்ரன், ஷபூர் ஜத்ரான், கைஸ் அகமது

மாற்று வீரர்கள்: அப்சர் ஜசாய், ஃபரித் அகமது மாலிக்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 minutes ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

40 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

1 hour ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

1 hour ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

2 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago