ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா.? கூகிளில் அதிர்ச்சி.!

Published by
கெளதம்
கூகிளில் ‘ரஷீத் கான் மனைவி’ என்று தேடும்போது அனுஷ்கா சர்மா பெயரை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷீத் கானின் மனைவி யாரென என்று தேடினால், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பெயரை கூகிள் காட்டுகிறது. ஆனால், எந்த அளவிற்கு இது உண்மை என்பதை பார்ப்போம்.
பாலிவுட் நடிகை, அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி இது அனைவரும் அறிந்ததே. அனுஷ்கா சர்மா 3 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அனுஷ்கா சர்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கூகுளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் மனைவி யாரென தேடினால் அனுஷ்கா சர்மாவின் பெயரை கூகுள் காட்டுகிறது. அவரது பெயருக்குப் பிறகு, திருமணமானவர் என்று எழுதப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மனைவியின் பெயர் அனுஷ்கா சர்மா என்றும் கூகிள் காட்டுகிறது. திருமண தேதியை பொறுத்தவரையில்,  கோலியுடனான திருமண தேதியான 11, 2017 என்று காண்பித்துள்ளது.

ரஷீத் கான் மனைவி என்று தேடினால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் ஏன் தோன்றுகிறது?

அதாவது, ரஷீத் கான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது உங்கள் விருப்பமான பாலிவுட் நடிகை யார் என்று கேட்கப்பட்டது,  அதற்கு அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரீத்தி ஜிந்தா என்று ரஷீத் தெரிவித்திருந்தார். அதன்பின், இது சர்ச்சை செய்தியாக உருவெடுத்து தொடர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் ரஷீத் கான் ஆவேசமடைந்தார். இதுவே இவர்களுக்கு இடையேயான தொடர்பு என்பதாகும்.

இதனால் தான் கூகிள் அனுஷ்கா ஷர்மாவை ரஷீத் கானின் மனைவியாகக் காட்டுகிறது. ஆனால் இதில் துளிக்கூட உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் ரஷீத் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதே குறிபிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago