ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்களை குவித்தது.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவும் 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ரன்கள் அடித்து பஞ்சாபி அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 108 ரன்களும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதிக சிக்சர்கள் அடித்த போட்டி என்ற சிறப்பையும் பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் இரண்டு அணி பந்துவீச்சாளர்களும் மிகவும் தண்டிக்கப்பட்டனர்.

எப்படி பந்துவீசுனாலும் பந்துகள் நாலாபுறமும் பறந்தது. இப்போட்டி மட்டுமின்று ஐபிஎல் தொடரிலேயே இப்படி தான் இருக்கிறது. சர்வ சாதாரணமாக குறைந்தபட்சம் 200 ரன்களை குவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இம்பேக்ட் பிளேயர் ரூல், சிறிய பவுண்டரி லைன், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் என்றே கருதுகின்றனர். இதனால் பவுலர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 7வது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. எனவே,  பவுலர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையே ஒரு சமநிலை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்கள் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பதிவில், தயவு செய்து பவுலர்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதில் SOS என்ற எமர்ஜென்சி குறியீடையும் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

14 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago