போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!

Published by
செந்தில்குமார்

ஒருநாள் உலககோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மேத்யூ வெயிட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார். ஜோக்ஸ் இங்கிலீஷ் ஒரு படி மேலே சென்று, 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என பறக்க விட்டு 110 ரன்கள் குவித்தார். முடிவில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!

இதனையடுத்து, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி திறம்பட செயல்பட்டு இந்த ஸ்கோரை முறியடித்தது. இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியை முன்னிலைப்படுத்தும் வகையில் ரன்களை அடித்தனர்.

ரிங்கு சிங் கடைசி ஓவர் வரை நின்று பொறுப்பாக விளையாடி, 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார். முடிவில் இந்தியா 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: மணிப்பால் டைகர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

இந்நிலையில், ஒரு இன்னிங்ஸின் முடிவில் ரின்கு சிங் பொறுமையாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடனான உரையாடல் தான், தன்னை கடைசி ஓவரில் நிதானமாக செயல்பட உதவியது என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் ஒரு முறை தோனியிடம் பேசி இருந்தேன். ஒரு போட்டியின் கடைசி ஓவரில் அவர் என்ன செய்கிறார் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். எந்த பந்தையும் நேராக அடிக்க முயற்சிக்க வேண்டும். எந்தவொரு விஷயத்துக்கும் அமைதியாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் கடைசிவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். அது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.” என்று ரிங்கு சிங் கூறினார்.

Recent Posts

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

8 minutes ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

50 minutes ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

2 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

2 hours ago

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…

3 hours ago

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

4 hours ago