4 ஸ்பின்னர் எதுக்கு? சர்ச்சை கேள்விக்கு விளையாட்டால் பதில் சொன்ன ரோஹித் சர்மா!!

Published by
அகில் R

ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்திருந்தது. அந்த அணியில் அக்சர் பட்டேல், குலதீப் யாதவ், ஜடேஜா மற்றும் சஹல் என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுருந்தனர். அந்த அணியை கண்ட ரசிகர்கள் பலரும் அப்போது பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பினார்கள்.

அதன்பின் அணியின் தலைமை பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தனர்.

அதில், பத்திரிகையாளர்கள் எதற்கு இந்திய அணியில் 4 ஸ்பின்னர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அப்போது இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இதை நான் இப்போது சொல்லமாட்டேன் வெஸ்ட் இண்டீஸில் விளையாடிய பிறகு சொல்கிறேன் என அப்போது கூறி இருந்தார்.

இது நேற்று நடைபெற்ற 2-ஆம் அரை இறுதி போட்டியில் அவர் கூறியதற்காக அர்த்தம் புரியவந்துள்ளது. நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 171 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

இதற்கு மிகமுக்கிய காரணம் சுழல் பந்து வீச்சாளர்களான அக்சரும், குலதீப்பும் தான். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். அதிலும், இந்த 6 விக்கெட்டுகளும் மிகமுக்கிய விக்கெட்டுகள் ஆகும். இதனால், இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது.

இதன் மூலம் அவரது ரசிகர்கள் அன்று பத்திரிகையாளரிடம் ரோஹித் சர்மா அப்படி கூறியதற்கு இதுதான் காரணம் எனவும் அவரது அணியின் தேர்வு சரியாகத்தான் இருக்கும் எனவும், அன்று எழுந்த அந்த சர்ச்சையான கேள்விக்கு இன்று விளையாட்டின் மூலம் அவர் பதிலளித்துள்ளார் எனவும் அவரது ரசிகர்கள் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

57 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago