Rohit Sharma not out [Image Source:Screengrab from Jio Cinema ]
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது36-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நேற்று ஐபிஎல் சீசனிகளில் 1000-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இறுதியாக அதிரடியாக விளையாடிய மும்பை அணி வெற்றிபெற்று 1000-வது ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. ஆனாலும், நேற்று ரோஹித் சர்மா பிறந்தநாள் என்பதால் அவர் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி நிறைய ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள்.
எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அவுட் குறித்து வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. சந்தீப் சர்மா பந்துவீச்சில் ரோஹித் போல்டு ஆனார். ஆனால், பந்து ஸ்டம்பில் படாமல், கீப்பரின் கையுறை பட்டதால் பெயில் விழுந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பந்து பெயிலைத் தாண்டி செல்லும் போதுதான் விளக்குகள் எரிந்தது. இதனால் ரோஹித் அவுட் இல்லை என அவருடைய ரசிகர்கள் பலரும் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…