ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 57 ரன்கள், உத்தப்பா 41 ரன்கள் அடித்தார்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில்மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்கியது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல் , பின்ச் இருவரும் களமிறங்கினார்கள்.ஆனால் பின்ச் 14 ரன்களில் வெளியேறினார்.ஓரளவு தாக்குபிடித்த படிக்கல் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய வில்லியர்ஸ் 55 * ரன்கள் அடித்தார்.களத்தில் குர்கீரத்சிங் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் தியாகி , கோபால் , திவாட்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இதனால், பெங்களூர் அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் அணி 7-வது இடத்தில் உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…