டிஎன்பிஎல் 2021:திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
Edison

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் 2021 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ,ரூபி திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.கொரோனா பரவல் காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது.

மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகள் முழுவதையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடம் பெற்றுள்ள அணிகள்:

இந்த தொடரில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டன. இதன்காரணமாக,பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ரூபி திருச்சி வாரியஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல்:

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் பாபா அபாரஜித் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி,ரூபி திருச்சி வாரியஸ் அணியினர் பேட்டிங் இறங்கினர்.அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் நிதானமாக விளையாடி,52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்து 71 ரன்களை எடுத்தார்.இதனையடுத்து,ரூபி திருச்சி வாரியஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.இதில்,நெல்லை அணியின் ஷருன் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.மேலும், 14-வது ஓவரில் பந்து வீசிய மதிவாணன் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில் 13.4 ஓவர்கள் முடிவிலேயே நெல்லை ராயல் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களிலேயே சுருண்டது. இதனால்,ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.மேலும்,திருச்சி அணி 2 புள்ளிகளைப் பெற்று,பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், இப்போட்டியில் அதிரடியாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீரர் அமித் சாத்விக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Published by
Edison

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

42 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

1 hour ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

3 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

3 hours ago