கிரிக்கெட்

சாய் சுதர்சன், சுரேஷ் குமார் அபாரம்..! கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

Published by
செந்தில்குமார்

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய LKK vs CSG போட்டியில், கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் அணியில், ஹரிஷ் குமார் மற்றும் சசிதேவ் பொறுப்பாக விளையாடிய நிலையில், சேப்பாக் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 127 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.

இதில் தொடக்க ஆட்டக்காரராக முதலில் களமிறங்கிய சச்சின் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடினார். அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்சன், சுரேஷ் குமாருடன் இணைந்து நிதானமாக விளையாடிய நிலையில், அரைசதத்தை தவறவிட்டு சுரேஷ் குமார் 47 ரன்களுடன் வெளியேறினார்.

சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். முடிவில், கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து, சேப்பாக் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில் அதிகப்பட்சமாக சாய் சுதர்சன் 64* ரன்களும், சுரேஷ் குமார் 47 ரன்களும் குவித்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

15 minutes ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

23 minutes ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

52 minutes ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

2 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

2 hours ago