ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகிய சுட்டிக் குழந்தை சாம் கரண்..!

Published by
murugan

ஐபிஎல் 2021 மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக சாம் கரண் விலகியுள்ளார்.

இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான சாம் கரண் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக  நடப்பு ஐபிஎல்லில் உள்ள மீதியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பையையில் இருந்தும் விலகுவதாக சாம் கரண் அறிவித்துள்ளார். இந்த சீசனில் சாம் கரண் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுகுறித்து சாம் கரண் வெளியிட்டுள்ள வீடியோவில், ஐபிஎல் சீசன் மற்றும் உலகக் கோப்பையில் இருந்து விலகுகிறேன். இந்த பருவத்தில் சென்னையுடன் என் நேரத்தை மிகவும் நேசித்தேன். சென்னை வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். அடுத்த சில நாட்களில் நான் இருக்கும் இடத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் விளையாடும் கடந்த இரண்டு சீசன்களில் உங்கள் ஆதரவை நான் முற்றிலும் நேசித்தேன் என தெரிவித்தார். 23 வயதான சாம் கரண் இங்கிலாந்துக்காக 24 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago