SAvsBAN Toss [Image source : X/@BatBallDennis]
SAvsBAN : இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 22 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 23வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. இன்று நடைபெறுகிற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது.
இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய நான்கு லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று உள்ளது. இதில் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இரண்டு ஆட்டங்களில் 300 ரன்களை தாண்டியும், ஒரு போட்டியில் 400 ரன்களைக் கடந்தும் சாதனை படைத்தது.
ஆனால், பங்களாதேஷ் அணியும் உலக கோப்பை தொடரின் நான்கு லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியுடன் தனது ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது. எனவே இந்த போட்டியானது அங்க வங்காளதேச அணிக்கு ஒரு முக்கிய போட்டியாக இருக்கும்.
இந்த இரு அணிகளும் இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 18 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி ஆறு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தைப் பொருத்தவரை வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் இருவருக்குமே ஏற்றதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேட்டர்கள் நிதானத்தையும் நேரத்தையும் ஒழுங்காக கடைப்பிடித்தால் அதிக ரன்களை பெற முடியும். தற்போது போட்டி தொடங்கிய நிலையில், தான் வெற்றி பெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை தேர்வு செய்தது போல இன்றைய ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் நோக்கில் அதிக ரன்களை குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பங்களாதேஷ்:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(C), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்
தென்னாப்பிரிக்கா:
குயின்டன் டி காக்(W), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ்
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…