சர்வதேசத்தரத்தில் சேலத்தில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதனாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் ,தோனி விளையாடுவார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சினீவாசன் உறுதியளித்தார்.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மலையடிவார சூழலில் அமைக்கப்பட்ட இந்த கிரிக்கெட் மைதானது ஆனது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது மட்டுமல்லாமல் ஐந்து பிட்ச்சுகளை உள்ளடக்கியுள்ளது இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த மைதானம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐசிசியின் முன்னாள் தலைவரும் தொழில் அதிபருமான சீனிவாசன் பேசுகையில் முன்னதாக, 14 வயதுக்கு உட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி போட்டியும்இம்மைதனாத்தில் நடத்தப்பட்ட உள்ளது. சர்வதேச தரத்தில் அமைந்த இம்மைதானத்தை சுற்றி விரைவில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படும், அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்
மேலும் தற்போது சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி என்று அறிவித்தார் மேலும் அவர் பேசுகையில் விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…
பீகார் : ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் ஆராவில் நடைபெற்ற ‘பீகார் பத்லாவ் யாத்ரா’…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.…
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…