வெளுத்து வாங்கிய ஷ்ரேயாஸ், ரோஹித், இஷான் கிஷன்: இலங்கைக்கு 200 ரன்கள் இலக்கு ..!

Published by
murugan

இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் 12-வது ஓவரில் லஹிரு குமாரிடம் போல்ட் ஆகி  44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 111 ரன்கள் எடுத்தனர்.  பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடியதால் சதம் விளாசுவர் என எதிர்பட்டப்பட்ட நிலையில் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.

பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர்  சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.  இறுதியாக இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கவுள்ளது.

Published by
murugan
Tags: #INDvSLT20I

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

4 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

28 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

56 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago