சொதப்பிய கொல்கத்தா.., கடைசிவரை போராடி வெற்றி பெற்ற பஞ்சாப் ..!

Published by
murugan

பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து  168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இதன்பின் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர்  67 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து, ராகுல் திரிபாதி 34 ரங்களில் அவுட்டான நிலையில் இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து ஒரு புறம் மயங்க் அகர்வால் அதிரடி விளையாட , மறுபுறம் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 3 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 40 ரன்னில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை  நிக்கோலஸ் பூரன் 12, மார்க்ரம் 18, தீபக் ஹூடா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து தமிழக வீரர் ஷாரு கான் களமிறங்கினார். கேப்டன் கே.எல் ராகுல் மட்டுமே ஆட்டம் முழுவதும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி அரைசதம் விளாசி 67 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால், 4 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாரு கான் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து  168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில்  வருண் சக்கரவர்த்தி 2 , சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இதனால் பஞ்சாப் அணி 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சென்றது.

Published by
murugan

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

9 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

10 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

11 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

11 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

11 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

12 hours ago