2-வது டெஸ்ட்: இந்தியாவிற்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் 39 ரன்கள், சுப்மன் கில் 36 ரன்கள், விராட் 46 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் நந்த்ரே பெர்கர், லுங்கி நிகிடி , ரபாடா தலா 3 விக்கெட்டை பறித்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் முன்னிலையில் இருந்நிலையில், தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடங்க வீரர்களாக டீன் எல்கர் , ஐடன் மார்க்ராம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டீன் எல்கர் 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , டேனி டி ஜோர்ஜி தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 62 ரன்கள் எடுத்து களத்தில் ஐடன் மார்க்ராம் 36*, டேவிட் பெடிங்கம் 7* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே களத்தில் இருந்த டேவிட் பெடிங்கம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் மட்டும் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒன்றை இலக்கில்  ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இழந்தனர். அதன்படி  கேசவ் மகாராஜ் 3,  ககிசோ ரபாடா 2, லுங்கி நிகிடி 8 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் ஐடன் மார்க்ராம் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 103 பந்தில் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இதனால் தென்னாபிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி  தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டையும், முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும்  பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

9 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

10 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

12 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

13 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

13 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

14 hours ago