இன்றைய போட்டியில் பவல், வார்னர் கூட்டணி போட்டு அதிரடியாக ஆடினார்கள். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 50-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் வரிசையில் மாற்றங்களுடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் – வார்னர் களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் மந்தீப் சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், 10 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த டேவிட் வார்னர், அதிரடியாக ஆடத் தொடங்கினார். பின்னர் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறப்பாக ஆடி 26 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய பவல், வார்னருடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார்கள்.
இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. இதில் அதிகபட்சமாக வார்னர் 92 ரன்களும், பவல் 67 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…