#SLvIND: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை..!

Published by
murugan

இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 13 ரன்களில் வெளியேற பின்னர் சஞ்சு சம்சன் களமிறங்கினார். சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தாசுன் ஷானகா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில்  மனிஷ் பாண்டே 11 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 4 பவுண்டரி அடித்து 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் எடுத்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால், இலங்கை அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மினோட் பானுகா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து பானுகா ராஜபக்சே, அவிஷ்கா உடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பானுகா ராஜபக்சே, அவிஷ்கா இருவரும் அரைசதம் விளாசினர். நிதானமாக விளையாடிய பானுகா ராஜபக்சே 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா 2 ரன் எடுத்து சேத்தன் சகாரியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களம் கண்ட தசுன் ஷானகா ரன் எடுக்காமல் மனிஷ் பாண்டேவிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய அணியில் ராகுல் சாஹர் 3 , சேத்தன் சகாரியா 2,  ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம்  தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

நடந்து முடிந்த 3 போட்டியில் 2 போட்டியில் இந்திய அணியும், 1 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago