இலங்கை பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து.! வெற்றி பெற 157 ரன்கள் இலக்கு.!

Published by
செந்தில்குமார்

ENGvsSL: 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணியில் முதலில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணிக்கு ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மாலன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி சிறப்பாக விளையாட, பேர்ஸ்டோவ் ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களமிறங்கி பெரிதாக சோபிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் பொறுப்பாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸும் தனது விக்கெட்டை இழந்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்துள்ளார்கள். இலங்கை அணியில் தங்களது அபாரமான பந்து வீச்சால் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ராஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தற்போது 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

15 hours ago