INDvAUS [FILE IMAGE]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அருமையாக விளையாடி வருகிறது. முதலில் வந்த ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. ஒரு பக்கம் கில் அதிரடியாக விளையாடினார். மற்றோரு பக்கம் நின்று கொண்டு இருந்த ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவருமே சதம் அடித்தனர். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
பிறகு, ஷ்ரேயாஸ் 105 ரன்களில் மேத்யூ ஷார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் அவுட் ஆகி வெளியே சென்ற சில நிமிடங்களிலே சுப்மன் கில்லும் மேத்யூ ஷார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருப்பினும் இவர்களுடைய அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
காயத்திற்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடவில்லை எனவும், அவரை அணியில் எடுத்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் இன்று நடைபெறும் போட்டியில் தன்னுடைய அதிரடி சதம் மூலம் ஷ்ரேயாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…