இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாக பொல்லார்ட் கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது அதிகபட்சமாக படிக்கல் 74 ரன்கள் அடித்தார்.
அடுத்ததாக 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அணியை கொண்டு சென்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் அவருக்கான வெகுமதி கண்டிப்பாக கிடைக்கும். இந்திய அணியில் அவரை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…