இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக லூயிஸ் , சுனில் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே லூயிஸ் 10 , சுனில் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
பிறகு இறங்கிய ஹெட்மேயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பரிதாபமான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை பொல்லார்ட் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 58 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பின்னர் இறங்கிய பூரன் 17 , ப்ரத்வேய்ட் 10 , ரோவ்மன் பவல் 32 ரன்களுடன் நடையை கட்டினார்கள். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகள் ,சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ஷிகர் தவான் 3 ரன்னுடன் வெளியேற பிறகு விராட் கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 20 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் விராட் கோலி , ரிஷாப் பந்த் இருவரும் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் நிறைவு செய்தனர். பின்னர் கோலி 59 ரன்னில் அவுட் ஆனார். தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய ரிஷாப் பந்த் கடைசி இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஆனால் இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ரிஷாப் பந்த் 65 ரன்களுடன் நின்றார். இறுதியாக இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிலும் வெற்றி பெற்று உள்ளது.இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.நாளை இந்த இரு அணிகளுக்கும் முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…