டி-20 உலகக் கோப்பை போட்டி;இந்தியா VS பாகிஸ்தான்…… 2 வீரர்களுக்கு மிக முக்கியப் பங்கு – கம்பீர் ஆலோசனை!

Published by
Edison

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியானது,நவம்பர் 14 ஆம் தேதி  நிறைவடைகிறது.

இதன்காரணமாக,கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகளை இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது.அதில்,2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

மேலும்,டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கம்பீரின் ஆலோசனை :

இந்நிலையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”இந்த போட்டியில் மூத்த வீரர்கள் மட்டுமே பொறுப்புகளை ஏற்று விளையாட வேண்டும்.மேலும், இளம் வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுவதை உறுதி செய்யுங்கள். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருந்தாலும்,விளையாட்டின் நுட்பம் மிகவும் முக்கியமானது.

மிக முக்கியமான இரண்டு வீரர்கள்:

நான் முதலில் பாகிஸ்தானை எதிர்கொண்டபோது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் விளையாடியுள்ளனர்.அந்த வகையில்,விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். எனவே அவர்கள் இருவரும் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணி:

இரு பிரிவுகளிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் பிளேஆஃப்களுக்கு முன்னேறுகின்றன. இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒரே பிரிவில் உள்ளன, எனவே எந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

38 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

56 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago