13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து,பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,களமிறங்கிய பங்களாதேஷ் அணி இறுதியில்,18.2 ஓவரிலேயே 10 விக்கெட்டையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை ரபாடா,நார்ட்ஜே ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து,இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் இறங்கி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் எடுத்து எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,டி காக்கும் 16 ரன்களில் மகேதி ஹசனின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார் .அதன்பின்னர்,இறங்கிய ஐடன் மார்க்ராம் டக் அவுட் ஆகியும்,ராஸ்ஸி வான் டெர் டுசென் 22 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
ஆனால்,பின்னர் களம் கண்ட கேப்டன் டெம்பா பவுமா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கை அழைத்து சென்றார். இறுதியில்,13.3 ஓவர் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 86 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதில் தட்டி சென்றது.டெம்பா பவுமா 31*,டேவிட் மில்லர் 5*.
பங்களாதேஷ் அணியை பொறுத்த வரை தஸ்கின் அகமது அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…