இந்தியா

“இந்திய அணி தவறு செய்துவிட்டது” – ரிக்கி பாண்டிங் கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய அணி முதல் இன்னிசை மட்டும் மனதில் வைத்து பவுலிங் அட்டாக்கை தேர்வு செய்துள்ளது என ரிக்கி பாண்டிங் கருத்து.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கை பேட்மேன்கள் இருப்பது தெரிந்தும், சீனியர் பந்துவீச்சாளர், அனுபவம் வாய்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் வார்னர் 43 ரன்கள் மற்றும் லபஸ்சன் 26 ரன்களும், கவாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். பின்னர் விக்கெட்டை பறி இழக்காமல்  ட்ராவல்ஸ் ஹெட் சதம் அடித்தும், ஸ்மித் அரைசதம் அடித்தும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். விக்கெட்டை எடுக்க முடியாமல்  இந்திய அணி பவுலர்கள் திணறினர்.

நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஹெட் 146* ரன்களுடனும், ஸ்மித் 95* ரன்களுடனும் உள்ளனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கும். மறுபக்கம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் இந்திய அணி அஸ்வினை எடுக்காததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை நீக்கிய இந்தியாவின் முடிவை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணி முதல் இன்னிசை மட்டும் மனதில் வைத்து பவுலிங் அட்டாக்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கைது பேட்ஸ்மேன்கள் உள்ளதால், ஜடேஜாவை விட அஷ்வின் சவாலாக இருப்பார், எனவே, இந்திய அணி தவறு செய்துவிட்டது எனவும் கூறியுள்ளார்

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

17 minutes ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

2 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

2 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago