பேட்டிங்கில் மிரளவைத்த டெல்லி அணி..! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி 213/2 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, டெல்லி அணியில் முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வார்னரும் பிருத்வி ஷாவும் இணைந்து அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 61 ரன்களை குவித்தனர். பின், வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ், பிருத்வி ஷாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 82* ரன்களும், பிருத்வி ஷா 54 ரன்களும், டேவிட் வார்னர் 46 ரன்களும், பிலிப் சால்ட் 26* குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago