இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில்,இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2.00 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கிடையில்,இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார்.வெங்கடேஷ் அய்யர்,ஷிகர் தவான்,விராட் கோலி,சூர்யகுமார் யாதவ் அணியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
அதே சமயம்,தனது சொந்த மண்ணில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணி பவுமா தலைமையில் களமிறங்கவுள்ளது.டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஒரு நாள் தொடருக்காக திரும்பியிருப்பது அணியின் பலமாகும்.
முன்னதாக,தென் ஆப்ரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி,தற்போது ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெற்றி முனைப்பில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
அணிகள்:
இந்தியா அணியின் கணிக்கப்பட்ட வீரர்கள்: லோகேஷ் ராகுல் (கேப்டன்),ஷிகர் தவான்,விராட் கோலி,சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர்,ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்,ரிஷாப் பண்ட்,வெங்கடேஷ் அய்யர்,தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் அல்லது புவனேஷ்வர்குமார், அஸ்வின்,
தென்ஆப்பிரிக்கா அணியின் கணிக்கப்பட்ட வீரர்கள்: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான்,பவுமா (கேப்டன்), மார்க்ராம்,மார்கோ ஜான்சென், பெலக்வாயோ, இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.வான்டெர் துஸ்சென்,டேவிட் மில்லர்,பிரிட்டோரியஸ் அல்லது ஜார்ஜ் லின்ட்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…