தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றி பதிவு செய்த நெதர்லாந்து..!

Published by
murugan

தென்னாபிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 207 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று நடப்பு உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே விக்ரம்ஜித் சிங் வெறும் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  அடுத்த ஓவரிலே மறுபுறம் விளையாடிய தொடக்க வீரர் மேக்ஸ் ஓ’டவுட் 18 ரன்னில் நடையை காட்டினார்.

அடுத்து இறங்கிய அக்கர்மேன் 13, பாஸ் டி லீடே 2 ரன் எடுத்து வெளியேற பிறகு மத்தியில் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டுவந்தார். ஸ்காட் சிறப்பாக விளையாடி 69 பந்தில் 78 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இதில் 10 பவுண்டரி, 1 சிக்ஸர் அடங்கும். கடைசியில் களமிறங்கிய ஆர்யன் தத், வான் டெர் மெர்வே இருவரும் அதிரடி காட்டினர். வந்த வேகத்தில் ஆர்யன் தத் 3 சிக்ஸர் விளாசி மொத்தம் 23 ரன்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் நின்றார். மறுபுறம் விளையாடிய வான் டெர் மெர்வே 29 அடிக்க இறுதியாக நெதர்லாந்து அணி 43 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் எடுத்தனர்.

மழை காரணமாக போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டது.  தென்னாபிரிக்கா அணியில் ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி நிகிடி தலா 2 விக்கெட்டை பறித்தனர். 246 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்கவீரர்களாக குயின்டன் டி காக், தேம்பா பாவுமாஇருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவருமே நிதானமாக விளையாடி வந்த நிலையில் குவிண்டன் டிகாக் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய ஐடன் மார்க்ராம் 1, ராஸ்ஸி வான் டெர் டுசென் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

பிறகு மத்தியில் களம் இறங்க டேவிட் மில்லர் நிதானமான விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். கடைசியில் களமிறங்கிய கேசவ் மகாராஜ் பொறுப்புடன் விளையாடி  40 ரன் குவித்தார்.  இறுதியில் தென்னாபிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 207 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டையும், பாஸ் டி லீடே, பால் வான் மீகெரென்,  ரோலோஃப் வான் டெர் மெர்வே, தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். தென்னாபிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டி தோல்வியும் தழுவியுள்ளது. நெதர்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

3 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

3 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

4 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

5 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

5 hours ago