இந்தியாவிற்கு வந்த அடுத்த சோதனை….ஐசிசி எடுத்த அதிரடி முடிவு.!!

Published by
பால முருகன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நேற்று இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா மெதுவாக பந்து விசியதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்திய அணி  ஐசிசி நிர்ணயித்ததை விட 5 ஓவர்கள் குறைவாக வீசிய காரணத்தால் இந்தியாவிற்கு 100 % அபராதம் விதித்துள்ளது. அதைப்போலவே, ஆஸ்திரேலியா அணியும் 4 ஓவர்கள் குறைவாக  வீசியுள்ளதால், அவர்களின் போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை செலுத்தவேண்டும் என ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசத் தவறினால் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி, இரண்டு அணிக்கும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் வீரர் ஷுப்மன் கில் அவுட் ஆனதற்கு நடுவரின் முடிவை விமர்சித்ததற்காக அவரது போட்டிக் கட்டணத்தில்  15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கில் அடித்த பந்தை கேமரூன் கிரீன் எடுத்த கேட்ச் அவுட் என மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ தெரிவித்திருந்தார். நடுவரின் அந்த முடிவை கேள்விக்குட்படுத்தும் வகையில் ஷுப்மேன் கில் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

11 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago