இலங்கை அணி அபார வெற்றி ..! ஹசரங்கா அசத்தல் ..!

Published by
அகில் R

இலங்கையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 3 ஒரு நாள் தொடர், 3 டி20 போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகிறது. 3  போட்டியை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. (முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது).

அதை தொடர்ந்து டி20 போட்டியில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்த கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டுமென கட்டாயத்துடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரான  கிரேக் எர்வின் தனது முதல் பந்திலேயே தீக்ஷனாவின் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திருப்பினார்.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் நிதானமாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் ஹசரங்காவின் மிகவும் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறியது. இறுதியாக ஜிம்பாப்வே  14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சதம் விளாசி சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!

அந்த அணியின் பிரையன் பென்னட் எடுத்த 12 பந்துகளில் 29 ரன்களே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்து வீச்சில் ஜொலித்தார்.

இதை தொடர்ந்து 83 ரன்கள் என்ற  மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு  ஆரம்பம் முதலே சாதகமாகவே போட்டி அமைந்திருந்தது. மிகவும் எளிதான இலக்கு என்பதால் விக்கெட்டை எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற முனைப்புடன் ஜிம்பாப்வே போராடியது. ஆனால் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிதறிடித்தனர்.

வெகு நேரத்திற்கு பிறகு வீழ்ந்த விக்கெட்டும் ஜிம்பாப்வே அணிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இலங்கை அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 88 ரன்களை எட்டி போட்டியை வென்றதுடன் இந்த டி20 தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியில் அதிக பட்சமாக  நிஸ்ஸங்கா ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன்  39* ரன்கள் எடுத்து இருந்தார்.

இதனால் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி வென்றது.

Published by
அகில் R

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago