டி20I : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றைய நாள் (ஜூன்-2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், அமெரிக்கா அணியும் இன்று காலை 6 மணிக்கு டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக கனடா அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய நவ்நீத் தலிவால் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். இவர் அதிரடி காட்டி 44 பந்துக்கு 61 ரன்கள் எடுத்தார் அதில் 3 சிக்ஸர்களும், 6 பவுண்டரிலும் அடங்கும்.
அதன் பின் அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் கிர்டனும் அவருடன் அதிரடி காட்ட கனடா அணியின் ஸ்கோர் உயர்வை கண்டது. சீரான இடைவெளியில் இருவரது விக்கெட்டும் விழுந்த பிறகு கனடா அணியின் விக்கெட் கீப்பரான ஷ்ரேயஸ் மொவ்வா களமிறங்கி ஒரு சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவரில் கனடா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துது. அதன் பின் இமாலய இலக்கை எட்டுவதற்கு பேட்டிங் களமிறங்கியது அமெரிக்கா அணி. முதல் 10 ஓவரில் அமெரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும். ஆனால் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆக்ரோஷமான அதிரடியில் சரிவில் இருந்து அமெரிக்கா அணி மீண்டது.
இருவரும் அரை சதம் கடந்து அபாரமாக கனடா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தனர். மிகச்சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்து, வெற்றியின் அருகில் எட்டிய போது ஆட்டமிழந்தார். ஆனால், மறுபக்கம் இருந்த ஆரோன் ஜோன்ஸ் மிகச்சிறப்பாக விளையாடி 17.2 ஓவர்களில் அமெரிக்க அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இதன் மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை அமெரிக்க அணி பதிவு செய்துள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…